வடக்கில் கொரோனா அச்சமில்லை! டெங்கு அதிகரிப்பு!

editor 2

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என அவர் கோரிக்கை
விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து
செல்கின்றன.

தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே வடமாகாண மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய தேவையில்லை.

ஆனால் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

Share This Article