இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர காவல்படையினரால் கைது!

editor 2

அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரை இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசார​ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மீனவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Share This Article