பலஸ்தீனத்தின் கமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய அதிரடித் தாக்குதலின் தொடராக இரு தரப்பு மோதல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இரண்டு நாடுகளிலும் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களில் குறைந்தது நூறு வரையானோர் இஸ்ரேலில் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே,
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய பதில் தாக்குதலில் தற்போது வரையில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் குறித்த தாக்குதல்கள் வான்வெளித் தாக்குதல்கள் என்றும் சசர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே,
பாலஸ்தீனத்தில் உள்ள தொலைத்தொடர்பு மையங்கள் உட்பட்ட பெருமளவான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்து வீழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
இரண்டு நாடுகளிலும் வாழும் மக்கள் போர்ப்பதற்றத்தினை எதிர்கொண்டிருப்பதாக சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.