குருந்தூர்மலையில் ரஜமகா விகாரைக்கு என்று சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் காணியை சிவ ஆலயம் அமைக்கவும் – அதன் தேவைகளுக்காகவும் ஒதுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன தான பத்திரண தெரிவித்துள்ளார்.
குருந்தூர் ரஜமஹா விகாரை பௌத்த தொல்பொருள் இடமாக தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, இந்த நிலம் தொல்லியல் ரீதியாக ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் சொந்தமானது.
இதேவேளை, வடக்கில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு குழு பணிப்புரை விடுத்துள்ளது.
குருந்தூர் ரஜமஹா விகாரை தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீர்வு என குறிப்பிட்டு, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு துறைசார் கண்காணிப்புக் குழுவிடம்பல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.