முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த நிலையில், அவரும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.