தயா கமகேவுக்குச் சொந்தமான மூன்று நிறுவனங்கள் ஏலவிற்பனைக்கு!

தயா கமகேவுக்குச் சொந்தமான மூன்று நிறுவனங்கள் ஏலவிற்பனைக்கு!

editor 2

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்கள், பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. 

இது தொடர்பான உத்தரவை,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் விடுத்துள்ளது. 

இதன்படி, குறித்த ஏலம், 2025 ஜூலை 2 ஆம் திகதியன்று நடைபெறும் என்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். 

குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய சுமார் 10 கோடி ரூபாய் தொகையை வசூலிக்கவே, இந்த மூன்று நிறுவனங்களையும் ஏலம் விடுவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Share This Article