ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்கள், பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இது தொடர்பான உத்தரவை,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் விடுத்துள்ளது.
இதன்படி, குறித்த ஏலம், 2025 ஜூலை 2 ஆம் திகதியன்று நடைபெறும் என்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய சுமார் 10 கோடி ரூபாய் தொகையை வசூலிக்கவே, இந்த மூன்று நிறுவனங்களையும் ஏலம் விடுவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.