நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும்!

editor 2

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசும் என அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. 

எனவே,பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ மையம் கோரியுள்ளது. 

தேவைப்பட்டால் உதவிக்கு 117 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ மையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share This Article