இராணுவத்திலிருந்து சட்டப்பூர்வமாகப் பதவி விலகிய 10,000 பேரை பொலிஸில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, 45 வயதுக்குட்பட்ட இராணுவத்திலிருந்து பதவி விலகியவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும் அவர்களை 05 வருடத்திற்கு பணியமர்த்துவதற்கான பொருத்தமான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.