முப்படைகளில் இருந்து தப்பியோடிய இராணுவத்தினர் உட்பட மொத்தம் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தினர் 2,261 பேர், கடற்படையினர் 194 பேர்,மற்றும் விமானப்படையினர் 198 பேர் அடங்குவர்.
இதே காலப்பகுதியில் பொலிஸார் மேலும் 330 பேரைக் கைது செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.