கடவுச்சீட்டு வழங்குவதற்கான 24 மணி நேர சேவை நிறுத்தப்படுகிறது!

கடவுச்சீட்டு வழங்குவதற்கான 24 மணி நேர சேவை நிறுத்தப்படுகிறது!

editor 2

கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் சேவையை 24 மணிநேரமும் முன்னெடுக்கும் நடைமுறை, எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய,

எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 07 மணிமுதல் பிற்பகல் 02 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்,

குறித்த காலப்பகுதியில் பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவைக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share This Article