யாழ்ப்பாண திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட இந்தியத் துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்நக்குருக்கள் பிரபாகர குருக்கள் ஓமந்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அவர், மனைவி, மகன் மற்றும் உறவினர் உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அவர்கள் பயணித்த காரின் முன் பகுதி முற்றாகச் சேதமடைந்த நிலையில் மிகச் சிரமப்பட்டே அவர்கள் மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த அவருடைய மனைவி யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் சீதாலெக்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
டிப்பர் வாகனத்துடன் மோதியபோதே விபத்து நிகழ்ந்துள்ளது.




