நயினாதீவு-குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு நேற்று
முன்தினம் இரவு கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இப்பாதை படகு நயினாதீவு – குறிகாட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாகப் பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு துறைமுகத்தில்
தரித்துவிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கடும் கடும் காற்றினால் அது கடலில் மூழ்கியுள்ளது.
இதேவேளை, அண்மையில் இப் பாதை படகு திருத்தப்பட்டு சீரான சேவையை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.