கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் திங்கட்கிழமையும் மறுநாள் செவ்வாய்க்கிழமையும் இந்த
விசேட ரயில் சேவைகள் நடைபெறவுள்ளன.
நீண்ட விடுமுறை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட ரயில் சேவைகள் நடைபெறவுள்ளன என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை,
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை வரையிலும் விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.