பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள் – பிரதமர்!

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள் - பிரதமர்!

editor 2

அரசியல்வாதிகள், அதிபர்கள் நன்மைகளை எதிர்பார்த்து பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்த்த காலம் முடிவடைந்துவிட்டது.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள், எவருக்கும் அரசாங்கத்திடமிருந்து விசேட கவனிப்பு கிடையாது. பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தொடங்கொட பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப் பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சமூகத்தை மேம்படுத்த நாம் பாடுபடுகையில், தவறுகளைச் சரி செய்து முறைமையை மாற்ற மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தலையிடுகிறார்கள். இதுதான் நாம் எதிர்பார்த்த மாற்றம். இதுதான் ஜனநாயகம் என்பது.

இப்போது, முன்னர் போன்று பொலிஸில் முறைப்பாடு அளிக்கச் சென்று திட்டுதல்களை நான் கேட்கவேண்டியதில்லை. கவனமாகக்கேட்டு, முறைப்பாடுகள்
சரியாக பதிவு செய்யப்படுகின்றன. சுமுகமாக உரையாடுகின்றார்கள், இதுதான் மக்கள் கேட்கும் மாற்றம். இந்த நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை ஒரு பிள்ளையைப் பாடசாலையில் சேர்ப்பது தான்.

சில காலமாகவே வழக்கத்தில் இருந்ததுபோல, மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்க்க அரசியல்வாதிகளிடமிருந்து கடிதங்களைப் பெற வரிசையில் நின்றார்கள்.

அப்படித்தான் பிள்ளைகள் பாடசாலையில் சேர்க்கப்பட்டனர், அந்த முறையை நாங்கள் மாற்றினோம்.

கடிதம் கேட்பது தவறு என்று இன்று மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள்
என்பது எங்களுக்குத் தெரியும்.

அந்தத் தவறு நடப்பதை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. இங்கு வருபவர்கள்
கவலையில் அழுகிறார்கள், சில விடயங்களை கேட்கின்ற போது எனக்கும் அழுகை வருகின்றது.

ஆனால் அவர்களில் யாரும் என்னிடம் எந்தத் தவறையும்
செய்யச் சொல்ல வில்லை-என்றார்.

Share This Article