அம்பாறை – கல்முனையில் இலஞ்சம் பெற்ற கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபை காரியத்தில் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்ச வாங்க முற்பட்ட போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகரினால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.
இப் பணத்தினை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடாக கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் பெற்றுக் கொண்ட போது மறைந்திருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 53 மற்றும் 47 வயதுடையவர்கள் என்பதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை (23) கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.