எதற்கும் அஞ்சப்போவதில்லை – நாமல்!

எதற்கும் அஞ்சப்போவதில்லை - நாமல்!

editor 2

‘நாம் தவறிழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை. எனவே, எதற்கும் அஞ்சப்போவதில்லை.’ என்று பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட பிறகு சி.ஐ.டிக்குவந்திருந்த நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

சனிக்கிழமையன்றுகூட பொலிஸார் தற்போது தீயாக வேலை செய்கின்றனர் போலும். நல்லது. எம்மை கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை, பாதாள குழுக்களை ஒடுக்குவதிலும் பொலிஸார் காட்ட வேண்டும்.

மாறாக அரசியல் தேவைகளுக்காக சட்டத்தை அமுல்படுத்த முற்படக்கூடாது.
அரசாங்கம் அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது.

நல்லாட்சிகாலத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயலாளராக இருந்தவரே தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார்.

தமது இயலாமையை மூடி மறைப்பதற்காகவே அவ்வப் போது கைதுகள் இடம்பெறுகின்றன.-என்றார்.

Share This Article