யாழ்.போதனா காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழ்.போதனா காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

editor 2

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர், நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது, காவலாளிகளுடன் தர்க்கப்பட்டு, அவர்களில் ஒருவரை கடித்துள்ளார்.

அதனை அடுத்து ஏனைய காவலாளிகள் ஒன்றிணைத்து கடித்த நபரை மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

அதேவேளை கடிகாயங்களுக்கு உள்ளான நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This Article