12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் நிறுத்தப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.