வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்தே குறித்த செல் மீட்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், மோட்டார் செல்லை செயலிழகச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.