IMF வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கான குழு இலங்கை வருகிறது!

IMF வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கான குழு இலங்கை வருகிறது!

editor 2

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக அதன் ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழு அடுத்த வாரம் நாட்டுக்கு வருகைதரவுள்ளது.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்திற்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாம தவணைக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பில், இலங்கை மத்திய
வங்கியின் அதிகாரிகள், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து அந்தக்குழு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை தொடர்பில் ஆராயவுள்ளது.

Share This Article