முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டது!

editor 2

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளப் பெறப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 06 பேர் என்ற அடிப்படையில் இதுவரையில் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

Share This Article