ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்டமை தொடர்பில் வேதநாயகன் கருத்து!

ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்டமை தொடர்பில் வேதநாயகன் கருத்து!

editor 2

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநராக இன்று வெள்ளிக்கிழமை (26) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாமல் மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் என தெரிவித்தார்.

Share This Article