பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் பிரதமர் தினேஷ்!

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் பிரதமர் தினேஷ்!

Editor 1

தமது பதவியிலிருந்து விலகுவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 47 (2) ஆம் பிரிவிற்கமைய, தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் குணவர்தன அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article