தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு!

editor 2

நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் பரிமாறப்பட்டுள்ளதாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அநுராதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து குறித்த வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அலவ்வ பகுதியில் மேலதிக வகுப்புகளை நடத்திவரும் ஆசிரியர் ஒருவரால், அந்த வினாத்தாளுக்கு நிகரான வினாத்தாள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வினாத்தாளைத் தயாரித்த உரிய அதிகாரிகள் குழுவிடம் விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article