புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும்!

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும்!

editor 2

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன், நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.

இதன்படி இன்றுடன் நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article