கச்சத்தீவு அருகில் இந்திய மீன்பிடி படகு விபத்து – இருவரைக் காணவில்லை!

கச்சத்தீவு அருகில் இந்திய மீன்பிடி படகு விபத்து - இருவரைக் காணவில்லை!

editor 2

கச்சத்தீவு அருகில் இந்திய மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவுக்கு அருகில் இந்திய கடற்பரப்பில் 4 பேருடன் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

குறித்த விபத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளதுடன், இருவர் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article