பாதாள கும்பலைச் சேர்ந்த மூவாயிரத்து 400 பேர் கைது!

பாதாள கும்பலைச் சேர்ந்த மூவாயிரத்து 400 பேர் கைது!

editor 2

பாதாள உலகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 3,400 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச்மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 3, 411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

Share This Article