இயக்கச்சியில் பேருந்தில் ஏற முற்பட்டவர் அதே பேருந்தில் சிக்கி மரணம்!

இயக்கச்சியில் பேருந்தில் ஏற முற்பட்டவர் அதே பேருந்தில் சிக்கி மரணம்!

editor 2

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று குறித்த பகுதியில் பயணிகளை ஏற்றி சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென பஸ்ஸை வழிமறித்து ஏற முற்பட்ட வேளை பஸ் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This Article