தபால் வாக்களிப்புக்கு 4 நாட்கள்!

editor 2

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்காக 04 நாட்களை ஒதுக்க தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

தாபால்மூல வாக்களிப்புக்கான உரிய திகதி தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது கடந்த 09 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

Share This Article