யாழில் பற்றைக்குள்ளிருந்து வாள்கள், முகமூடிகள் உட்பட்ட பொருட்கள் மீட்பு!

யாழில் பற்றைக்குள்ளிருந்து வாள்கள், முகமூடிகள் உட்பட்ட பொருட்கள் மீட்பு!

editor 2

குற்றச்செயல்களை மேற்கொள்ளும் நோக்கில் பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்று திங்கட்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருபவை வருமாறு,

ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்
குள் இருந்தே வாள்களை பொலிஸார் மீட்டனர்.

சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article