தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 60 முறைப்பாடுகள்!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 60 முறைப்பாடுகள்!

editor 2

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காக சில அரச நிறுவனங்களின் சிரேஷ்ட பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியமை, பூரணப்படுத்தப்படாத அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article