அம்பாறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பொலிஸார் இருவர் உட்பட்ட நால்வர் மரணம்!

அம்பாறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பொலிஸார் இருவர் உட்பட்ட நால்வர் மரணம்!

editor 2

அம்பாறை – கராண்டுகல பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு கான்ஸ்டபிள் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் 42 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரும் கராண்டுகல பொலிஸ் நிலையத்தில் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள இருவரும் கராண்டுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, இங்கினியாகல பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று அதிகாலை 54 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய அவரது மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கராண்டுகல பொலிஸ் நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கான்ஸ்டபிளே குறித்த இரண்டு பெண்களையும் மற்றைய கான்ஸ்டபிளையும் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

Share This Article