ரணிலைச் சந்திக்கவில்லை – மஹிந்த அறிவிப்பு!

ரணிலைச் சந்திக்கவில்லை - மஹிந்த அறிவிப்பு!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தனக்கும் இடையில் நேற்று(01) இரவு விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாகவும் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article