ஆங்கில தினப் போட்டிக்காக சென்ற மாணவியும் தாயாரும் விபத்தில் சிக்கி படுகாயம்!

ஆங்கில தினப் போட்டிக்காக சென்ற மாணவியும் தாயாரும் விபத்தில் சிக்கி படுகாயம்!

editor 2

கிளிநொச்சி மாவட்டம் –  பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில்  ஏ-9 வீதியில் யாழ். நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயும்  மகளும் இத்தாவில் பாடசாலை ஒன்றிற்கு திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அங்கிருந்த இளைஞர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆங்கில தின போட்டி ஒன்றிற்காக தனது மகளை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article