20 இலட்சம் ரூபா பணத்துடன் பயணித்த முல்லைத்தீவு இளைஞர் சடலமாக மீட்பு!

20 இலட்சம் ரூபா பணத்துடன் பயணித்த முல்லைத்தீவு இளைஞர் சடலமாக மீட்பு!

editor 2

20 இலட்சம் ரூபாய் பணத்துடன் இரவுநேரம் தனியாக பயணித்த இளைஞர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கொண்டு சென்ற பணமும் அணிந்திருந்த நகைகளும் காணாமல் போயுள்ளன. எனவே, இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு – பாண் டியன் குளத்திலிருந்தே குறித்த இளைஞரின்
சடலம் நேற்று மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி யோகபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராசா ஜீவன் (வயது27) என்பவராவார்.

குறித்த இளைஞர் நேற்று முன்தினம் மாலை யோகபுரத்திலிருந்து பாண்டியன் குளத்துக்கு 20 இலட்சம் ரூபாய் பணத்துடன் தனியாகச் சென்றுள்ளார்.

கனடா செல்வதற்காக அந்தப் பணத்தை டொலராக மாற்றும் நோக்கிலேயே அவர்
அந்தப் பணத்தைக் கொண்டு சென்றார் என்று கூறப்படுகின்றது.

இறுதியாக, இரவு 8.40 மணிக்கு தனது நண்பர்களுடன் கைபேசி வழியே தொடர்பு கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் நண்பர்கள் அவரின் கைபேசிக்கு அழைப்பு எடுத்தனர்.

ஆனால், அவரின் கைபேசி அணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரின் நண்பர்கள் அவரைத் தேடிச்சென்றனர்.

அதிகாலை 3 மணியளவில் பாண்டியன் குளத்தின் கரையில் அவரின் மோட்டார் சைக்கிள் மட்டும் விழுந்த நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சடலத்தில் பெருவிரலில் மட்டும் சிறு காயம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் கொண்டு சென்ற பணமும் அவர் அணிந்திருந்த
நகைகளும் காணப்படவில்லை.

இதனால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்று மாலை நீதிபதி சென்று பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொதுமருத்து மனையில் ஒப்படைக்கப்பட்டது.

முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article