வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு!

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் முக்கிய அறிவிப்பு!

editor 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக தங்களது வாக்கெடுப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாதவர்கள் பிறிதொரு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர், பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சரண மாவத்தை, இராஜகிரிய எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானவை என விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது www.election .gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article