கொழும்பில் பணியாற்றிய யாழ்ப்பாணத்து இளைஞரைக் காணவில்லை!

கொழும்பில் பணியாற்றிய யாழ்ப்பாணத்து இளைஞரைக் காணவில்லை!

Editor 1

கொழும்பில் பணியிலிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாயை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைகளின் போது அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வது வழமை. இதனிடையே, கடந்த ஒரு வார காலமாக அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் கொழும்பில் அவர் பணியாற்றிய இடத்தில் விசாரித்துள்ளனர். அவர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மானிப்பாய்
பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article