கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு!

editor 2

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

119 என்ற காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்திய ஒருவர் இது தொடர்பாக எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப்பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் குழு அங்கு சோதனைகளை மேற்கொண்டுள்ளது. 

மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அத்துடன் குறித்த அழைப்பை எடுத்தவர் தொடர்பான விசாரணைகளைக் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

Share This Article