போதைப்பொருள் வர்த்தகத்துக்கு உதவி; கடற்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர்!

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு உதவி; கடற்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர்!

editor 2

போதைப்பொருள் கடத்தல், வர்த்தகத்துக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.

கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்களாவர்.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share This Article