ஊசி போடப் பயந்து தப்பிச் சென்றவர் விபத்தில் சிக்கி மரணம்!

ஊசி போடப் பயந்து தப்பிச் சென்றவர் விபத்தில் சிக்கி மரணம்!

editor 2

மருத்துவமனை சிகிச்சையிலிருந்து இரவுநேரம் தப்பிச் சென்றவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

வவுனியா – கோவில்புதுக்குளம் – ராணி மில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவரே உயிரிழந்தவராவார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

வவுனியா பொது மருத்துவமனையில் நோய் ஒன்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக உயிரிழந்த நபர் சேர்ந்துள்ளார். அவருக்கு ஊசி மூலம் மருந்து ஏற்றப்படவிருந்தது. ஊசி போடப் பயந்த அவர் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை ராணி மில் பகுதியில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பொலிஸாரின் விசாரணையில் அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியவர் என்றும் வாகனம் ஒன்று அவரை மோதி விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article