கிளி., யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர்கள் நிரந்தர அரச அதிபர்களாக நியமனம்!

கிளி., யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர்கள் நிரந்தர அரச அதிபர்களாக நியமனம்!

editor 2

கிளிநொச்சி, யாழ்.மாவட்ட அரச அதிபர்களாக எஸ்.முரளிதரன், ம.பிரதீபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக ம. பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரச
அதிபராக எஸ். முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை பிரதமர் தினேஷ் குணவர்த்தன பொது நிர்வாக அமைச்சில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக இருந்த அ. சிவபாலசுந்தரன் ஓய்வு பெற்றமையைத் தொடர்ந்து பிரதீபன் பதில் அரச அதிபராக பதவி வகித்து
வந்தார் என்பதுடன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி ஓய்வு பெற்ற பின்னர் பதில் அரச அதிபராக எஸ்.முரளிதரன் பதவி வகித்துவந்திருந்தார்.

நேற்றைய தினம் கொழும்பு மாவட்ட அரச அதிபராக பிரசன்ன ஜனககுமார, களுத்துறை மாவட்ட செயலராக ஜி. எம். ஜனக குணவர்த்தன
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Share This Article