யாழில் தூக்கத்திலிருந்த தம்பதியினர் மீது வாள்வெட்டு!

யாழில் தூக்கத்திலிருந்த தம்பதியினர் மீது வாள்வெட்டு!

editor 2

யாழ்ப்பாணத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தம்பதியினர் மீது வாள் வெட்டுத்  தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவாலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த மர்ம நபரே இவ்வாறு தூக்கத்தில் இருந்த தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article