எரிந்த நிலையில் கோப்பாயில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

எரிந்த நிலையில் கோப்பாயில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

editor 2

யாழ்ப்பாணம் – கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிளொன்று நேற்றைய தினம் சனிக்கிழமை (22) இரவு 11 மணியளவில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பற்றிய விபரம் இதுவரை அறியப்படவில்லை. 

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share This Article