யாழிலிருந்து தம்புள்ளை சென்ற பாரஊர்தி விபத்து! இருவர் படுகாயம்!

யாழிலிருந்து தம்புள்ளை சென்ற பாரஊர்தி விபத்து! இருவர் படுகாயம்!

editor 2

யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டு சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பௌசர் (நீர்த்தாங்கி வாகனம்) ஒன்றுடன் மோதி கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வருகின்றது.

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் மிஹிந்தலை – பலுகஸ்வௌ பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 03 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாரஊர்தியில் சென்ற சாரதியும் உதவியாளருமே படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

பார ஊர்திச் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிகிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article