பருத்தித்துறை மருத்துவமனை விடுதியிலிருந்து மருத்துவரின் சடலம் மீட்பு!

பருத்தித்துறை மருத்துவமனை விடுதியிலிருந்து மருத்துவரின் சடலம் மீட்பு!

Editor 1

பருத்தித்துறை ஆதார மருத்துவமனை விடுதியிலிருந்து மருத்துவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே மருத் துவமனையின் பெண் நோயியல் மருத்துவரான திருநெல்வேலியை சேர்ந்த பிரேமானந்தராசா கிரிஷாந் (வயது 30) என்பவராவார்.

விடுதியில் தங்கியிருந்தவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக மருத்துவரின் உறவினர் ஒரு வர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, அவ ரின் விடுதியை திறந்த போது மருத்துவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

அதிகளவான மயக்க மருந்தை உடலில் செலுத்தப்பட்டிருந்தமையே மரணத்துக்குக் காரணமென பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட
மருத்துவ அதிகாரி கனகசபை வாசு தேவா மேற்கொண்ட பிரேத பரிசோதனை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article