தேர்தலை ஒத்திவைத்தால் அதுவே ஐ.தே.கவின் இறுதி என்கிறார் மஹிந்த!

தேர்தலை ஒத்திவைத்தால் அதுவே ஐ.தே.கவின் இறுதி என்கிறார் மஹிந்த!

Editor 1

அரசியலமைப்பு ரீதியாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் அவ்வாறு செயற்பட்டால் அதுவே ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தம் மீது நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், சிலரின் செயற்பாட்டால் கட்சி எதனையும் இழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்  தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இப்போதைக்கு கூற முடியாது எனவும், அதனை சரியான நேரத்தில், மக்கள் முன் கூறுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article