அம்பாறையில் போதைப் பொருள் உட்கொண்ட மாணவர்கள் இருவர் மயங்கி வீழ்ந்தனர்!

அம்பாறையில் போதைப் பொருள் உட்கொண்ட மாணவர்கள் இருவர் மயங்கி வீழ்ந்தனர்!

Editor 1

அம்பாறை, பதியத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் போதைப்பொருள்
அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் பதியத்தலாவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் 6 வயது மாணவனும் 7 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 11 வயது மாணவனுமே இவ்வாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இந்த இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் இவர் பதியத்தலாவ, கெஹெல் உல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடையவராவார்.

இதேவேளை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஇரண்டு மாணவர்களும் சகோதரர்கள் என்பதுடன் இவர்கள் இருவரும் பாடசாலைக்கு வரும் வழியில் கைதான இளைஞனை சந்தித்துள்ள நிலையில் அந்த இளைஞன் இவர்களுக்கு போதை மாத்திரைகளைக் கொடுத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் பாடசாலைக்கு சென்ற இரண்டு மாணவர்களும் அந்த இளைஞன் கொடுத்த போதை மாத்திரைகளை உட்கொண்டதுடன் சிறிது நேரத்தில் இரு மாணவர்களும் மயங்கி வீழ்ந்ததாகவும் இது குறித்து அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் சிலரால் இந்த மாணவர்கள் மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article