கிராம அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

கிராம அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Editor 1

தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிராம அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன இதனை தெரிவித்தார்.

இதேவேளை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் வேலைநிறுத்தம் இன்று 36ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article