நாட்டில் செய்மதி இணைய சேவையை ஆரம்பிக்க எலான் மஸ்கின் ஸ்ரார் லிங் நிறுவனத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தை மேற் கோள்காட்டி
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பொது கலந்தாய்வு விவரம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எலான் மஸ்க்குக்கும் இடையில் இந்தோனேசியாவில் அண்மையில் நடந்த கலந்துரையாடலை
அடுத்தே செய்மதி இணைய சேவைஇலங்கையில் ஆரம்பிக்கப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.