மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

Editor 1

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்து சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலுக்கு வரும் வகையில் அவர்களது விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

புதிய மின்சார சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார ஊழியர் சங்கம் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Share This Article